பனி வார் உண்கணும்
|
|
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
|
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
|
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
|
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
|
5
|
எவன் கையற்றனை? இகுளை! அவரே
|
|
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
|
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
|
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
|
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
|
10
|
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
|
|
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
|
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
|
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
|
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
|
15
|
அருவித் துவலையொடு மயங்கும்
|
|
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
|
|
மேல் |