பானாட் கங்குலும்
|
|
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
|
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
|
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
|
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
|
5
|
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
|
|
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
|
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
|
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
|
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
|
10
|
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
|
|
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
|
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
|
|
எழுதியன்ன கொடி படு வெருகின்
|
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
|
15
|
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
|
|
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
|
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
|
|
வெரு வரு கானம், நம்மொடு,
|
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |