பிணங்கு அரில் வள்ளை நீடு
|
|
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
|
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
|
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
|
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
|
5
|
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
|
|
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
|
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
|
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
|
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
|
10
|
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
|
|
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
|
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
|
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
|
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
|
15
|
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க்
கள்ளூர்,
|
|
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
|
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற
|
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
|
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
|
20
|
நீறு தலைப்பெய்த ஞான்றை,
|
|
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயின்
மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன்
மள்ளனார்
|
|
மேல் |