பிறர் உறு விழுமம்
|
|
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
|
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
|
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
|
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
|
5
|
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப,
|
|
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
|
|
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு
|
|
அறியக் கூறல் வேண்டும் தோழி!
|
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
|
10
|
செழுங் கோட் பலவின் பழம் புணையாக,
|
|
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
|
|
வறன் உறல் அறியாச் சோலை,
|
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |