பின்னுவிட நெறித்த
|
|
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
|
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
|
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
|
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
|
5
|
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
|
|
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
|
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
|
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
|
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
|
10
|
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
|
|
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
|
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
|
|
'வாரார்கொல்?' எனப் பருவரும்
|
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து
உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு
கடாயது. - குறுவழுதியார்
|
|
மேல் |