புணர்ந்தோர் புன்கண்
|
|
புணர்ந்தோர் புன்கண் அருளலும்
உணர்ந்தோர்க்கு
|
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
|
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
|
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
|
5
|
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
|
|
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
|
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
|
10
|
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
|
|
அருளான் வாழி, தோழி! அல்கல்
|
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
|
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
|
|
காயா மென் சினை தோய நீடிப்
|
15
|
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
|
|
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
கை ஆடு வட்டின் தோன்றும்
|
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி
சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
|
|
மேல் |