பூங் கண் வேங்கைப்
|
|
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
|
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
|
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
|
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
|
5
|
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
|
|
வேட்டம் போகிய குறவன் காட்ட
|
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
|
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
|
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
|
10
|
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
|
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
|
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
|
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
|
15
|
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
|
|
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
|
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
|
|
பெரு வரை நண்ணிய சாரலானே.
|
தோழி இரா வருவானைப் 'பகல்
வா' என்றது. - கபிலர்
|
|
மேல் |