பூங் கணும் நுதலும் பசப்ப
|
|
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
|
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
|
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
|
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
|
5
|
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்
|
|
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
|
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள்
தொகுத்து,
|
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
|
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
|
10
|
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை
|
|
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
|
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
|
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
|
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
உறையூர் முதுகூத்தனார்
|
|
மேல் |