பெருங் கடல் முகந்த
|
|
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
|
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
|
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
|
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
|
5
|
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
|
|
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
|
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
|
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
|
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
|
10
|
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி,
|
|
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
|
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
|
|
குறமகள் காக்கும் ஏனல்
|
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
|
இரவில் சிறைப்புறமாகத்
தோழி சொல்லியது. - வீரை வெளியன்
தித்தனார்
|
|
மேல் |