பெருங் கடற் பரப்பில்
|
|
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
|
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
|
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
|
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
|
5
|
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
|
|
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
|
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
|
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
|
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
|
10
|
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
|
|
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
|
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
|
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
|
|
நாடு தரு நிதியினும் செறிய
|
15
|
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
|
தலைமகற்குத் தோழி செறிப்பு
அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |