பெரும் பெயர் மகிழ்ந
|
|
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
|
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
|
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
|
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
|
5
|
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
|
|
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
|
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
|
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
|
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
|
10
|
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
|
|
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
|
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
|
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
|
|
ஊடினள் சிறு துனி செய்து எம்
|
15
|
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார்
|
|
மேல் |