பெரு மலைச் சிலம்பின்
|
|
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
|
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
|
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
|
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன்
அகழ்வோன்,
|
5
|
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,
|
|
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
|
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
|
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
|
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
|
10
|
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு
|
|
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
|
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்
வாய்
|
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
|
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
|
15
|
யாயும், 'அவனே' என்னும்; யாமும்,
|
|
'வல்லே வருக, வரைந்த நாள்!' என,
|
|
நல் இறை மெல் விரல் கூப்பி,
|
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
|
|
மேல் |