பேர் உறை தலைஇய
|
|
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
|
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
|
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
|
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
|
5
|
வித்திய மருங்கின் விதை பல நாறி,
|
|
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
|
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
|
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
|
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
|
10
|
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
|
|
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
|
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
|
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
|
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
|
15
|
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
|
|
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
|
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
|
|
விரிஉளை, நல் மான் கடைஇ
|
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத்,
தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
|
|
மேல் |