பைபயப் பசந்தன்று
|
|
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
|
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
|
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
|
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
|
5
|
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
|
|
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
|
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
|
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
|
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
|
10
|
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
|
|
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
|
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
|
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
|
15
|
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?
|
போக்கு உடன்பட்ட தலைமகள்
தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
மேல் |