பொறி வரிப் புறவின்
|
|
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
|
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
|
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
|
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
|
5
|
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,
|
|
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
|
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
|
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
|
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
|
10
|
நிலை அரும் பொருட் பிணி
நினைந்தனிர்எனினே,
|
|
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
|
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
|
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
|
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
|
15
|
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,
|
|
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
|
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?
|
செலவு உணர்த்திய தோழி,
தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு
அழுங்கச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
|
மேல் |