மங்குல் மா மழை
|
|
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
|
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
|
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
|
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
|
5
|
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
|
|
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
|
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
|
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
|
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
|
10
|
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
|
|
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
|
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
|
|
நம் நோய் அறியா அறனிலாளர்
|
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
|
15
|
ஆனாது எறிதரும் வாடையொடு
|
|
நோனேன் தோழி! என் தனிமையானே.
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
மேல் |