மண்கண் குளிர்ப்ப வீசித்
|
|
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
|
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
|
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
|
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
|
5
|
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
|
|
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
|
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
|
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
|
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
|
10
|
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
|
|
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
|
|
கடிய கூறி, கை பிணி விடாஅ,
|
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
|
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது
என்வயின்
|
15
|
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
|
|
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன்
இன்றும்
|
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
|
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
|
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
|
20
|
என் குறைப் புறனிலை முயலும்
|
|
அண்கணாளனை நகுகம், யாமே.
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக்
கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம்
ஆம்.- நல்வெள்ளியார்
|
|
மேல் |