மண்ணா முத்தம் ஒழுக்கிய
|
|
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
|
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
|
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
|
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
|
5
|
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
|
|
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
|
|
அரிய கானம் என்னார், பகை பட
|
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
|
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
|
10
|
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
|
|
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
|
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
|
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை
மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
மேல் |