மணி மருள் மலர
|
|
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
|
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
|
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
|
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
|
5
|
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல்
சூட்டுப்
|
|
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
|
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
|
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
|
|
காமம் பெருமை அறியேன், நன்றும்
|
10
|
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
|
|
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
|
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
|
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
|
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த
மொய்ம்பின்,
|
15
|
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
|
|
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
|
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
|
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
|
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
|
20
|
ஆதிமந்தி போல,
|
|
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |