மணி வாய்க் காக்கை
|
|
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
|
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
|
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
|
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
|
5
|
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
|
|
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
|
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
|
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
|
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
|
10
|
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள்,
இவள்வயின்
|
|
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
|
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
|
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
|
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
|
15
|
'செல்வேம்' என்னும் நும் எதிர்,
|
|
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
|
செலவு உணர்த்திய
தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
மேல் |