மத வலி யானை
|
|
மத வலி யானை மறலிய பாசறை,
|
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
|
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
|
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
|
5
|
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல்
விரைந்து,
|
|
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
|
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
|
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
|
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
|
10
|
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
|
|
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
|
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
|
|
போது உறழ் கொண்ட உண்கண்
|
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
|
வினை முற்றிய தலைமகற்கு
உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க்
கூத்தன் கடுவன் மள்ளனார்
|
|
மேல் |