மதி இருப்பன்ன மாசு
|
|
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
|
|
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
|
|
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
|
|
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
|
5
|
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி,
|
|
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
|
|
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
|
|
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
|
|
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை
|
10
|
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென
|
|
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
|
|
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
|
|
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
|
|
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
|
15
|
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே.
|
தோழி தலைமகனைச் செறிப்பு
அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது.
-பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
|
|
மேல் |