மலி பெயல் கலித்த
|
|
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
|
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
|
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
|
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
|
5
|
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
|
|
கோடை நீடிய பைது அறு காலை,
|
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
|
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
|
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
|
10
|
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
|
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
|
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
|
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை
|
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்
|
|
மேல் |