மலைமிசைக் குலைஇய
|
|
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
|
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
|
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
|
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
|
5
|
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
|
|
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
|
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
|
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
|
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
|
10
|
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
|
|
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
|
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
|
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
|
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
|
15
|
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்
சிறந்து,
|
|
வினைவயின் பெயர்க்கும் தானை,
|
|
புனைதார், வேந்தன் பாசறையேமே!
|
தலைமகன் பாசறையிலிருந்து
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
|
|
மேல் |