மழை இல் வானம்
|
|
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
|
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
|
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
|
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
|
5
|
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
|
|
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
|
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
|
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
|
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
|
10
|
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
|
|
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
|
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
|
|
காய் சின யானை கங்குல் சூழ,
|
|
அஞ்சுவர இறுத்த தானை
|
15
|
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
|
பருவம் கண்டு, வன்புறை எதிர்
அழிந்து, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது;தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு
இளங்கண்ணனார்
|
|
மேல் |