மறந்து, அவண் அமையார்
|
|
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
|
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
|
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
|
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
|
5
|
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
|
|
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
|
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
|
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
|
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
|
10
|
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்
குடை,
|
|
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
|
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
|
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
|
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
|
15
|
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
|
|
மருதமர நிழல், எருதொடு வதியும்
|
|
காமர் வேனில்மன் இது,
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
|
தலைமகள் தோழிக்கு வன்புறை
எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய
தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று
மூதெயினனார்
|
|
மேல் |