மன்று பாடு அவிந்து
|
|
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
|
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
|
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
|
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
|
5
|
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
|
|
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
|
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
|
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
|
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
|
10
|
கான நாடன் வரூஉம், யானைக்
|
|
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
|
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
|
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
|
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
|
15
|
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |