மனை இள நொச்சி
|
|
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
|
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
|
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
|
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
|
5
|
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
|
|
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
|
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
|
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
|
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
|
10
|
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
|
|
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
|
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
|
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
|
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
|
15
|
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
|
|
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
|
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
|
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
|
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
|
20
|
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
|
|
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
|
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
|
|
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
|
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
|
25
|
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
|
|
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
|
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
|
பொருள் வலிக்கப்பட்டுப்
பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று
மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. -
காவன்முல்லைப் பூதனார்
|
|
மேல் |