மாக விசும்பின் மழை தொழில்
|
|
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
|
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
|
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
|
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
|
5
|
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
|
|
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
|
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து
உகுப்ப,
|
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
|
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
|
10
|
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
|
|
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
|
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
|
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
|
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
|
15
|
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
|
|
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
|
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
|
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
|
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
|
20
|
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
|
|
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
|
|
என்னுழியதுகொல் தானே பல் நாள்
|
|
அன்னையும் அறிவுற அணங்கி,
|
|
நல் நுதல் பாஅய பசலை நோயே?
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி
தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்
|
|
மேல் |