மாதிரம் புதையப் பாஅய்
|
|
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
|
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
|
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
|
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
|
5
|
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
|
|
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
|
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல
|
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
|
|
கார் தொடங்கின்றே காலை; காதலர்
|
10
|
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
|
|
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
|
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
|
|
கொலை குறித்தன்ன மாலை
|
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மதுரை
மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
மேல் |