மான்றமை அறியா
|
|
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
|
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
|
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
|
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
|
5
|
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,
|
|
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
|
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
|
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
|
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
|
10
|
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,
|
|
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
|
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
|
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
|
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
|
15
|
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,
|
|
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
|
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
|
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |