முடவு முதிர் பலவின் குடம்
|
|
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
|
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
|
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
|
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
|
5
|
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
|
|
முழவன் போல அகப்படத் தழீஇ,
|
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
|
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
|
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
|
10
|
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
|
|
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
|
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
|
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
|
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
|
15
|
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
|
|
புதுவது புனைந்த திறத்தினும்,
|
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
|
வரைந்து எய்திய பின்றை மண
மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
அஞ்சியத்தை மகள் நாகையார்
|
|
மேல் |