முதைச் சுவற் கலித்த
|
|
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
|
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
|
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
|
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
|
5
|
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
|
|
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
|
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
|
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
|
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
|
10
|
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
|
|
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
|
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
|
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
|
|
கொடு விரல் உளியம் கெண்டும்
|
15
|
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-
ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
மேல் |