முரசுடைச் செல்வர்
|
|
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
|
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
|
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்
கதிர்
|
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
|
5
|
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
|
|
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
|
|
தீம் புனல் ஊர! திறவதாகக்
|
|
குவளை உண்கண் இவளும் யானும்
|
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
|
10
|
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
|
|
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
|
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
|
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக
|
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக்
கிடாஅய்
|
15
|
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
|
|
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
|
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த
தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர்
மூலங்கிழார்
|
|
மேல் |