முல்லை வைந் நுனை தோன்ற
|
|
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
|
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
|
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
|
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
|
5
|
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
|
|
கருவி வானம் கதழ் உறை சிதறி,
|
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
|
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
|
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
|
10
|
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
|
|
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
|
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
|
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
|
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
|
15
|
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
|
|
போது அவிழ் அலரின் நாறும்
|
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
|
தோழி தலைமகளைப் பருவங்
காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
|
|
மேல் |