முளை வளர் முதல
|
|
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
|
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
|
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து
ஒடுங்கிய,
|
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
|
5
|
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
|
|
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
|
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
|
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
|
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
|
10
|
நின் புரை தக்க சாயலன் என, நீ
|
|
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
|
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
|
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
|
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
|
15
|
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.
-கபிலர்
|
|
மேல் |