முனை கவர்ந்து கொண்டென
|
|
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர்
எழுந்து,
|
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
|
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
|
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
|
5
|
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
|
|
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
|
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
|
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
|
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
|
10
|
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
|
|
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
|
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
|
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
|
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார்
அரிப் பனி
|
15
|
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
|
|
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
|
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
|
|
ஓர் எயில் மன்னன் போல,
|
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பாண்டியன் ஏனாதி
நெடுங்கண்ணனார்
|
|
மேல் |