மூத்தோர் அன்ன
|
|
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
|
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
|
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
|
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
|
5
|
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
|
|
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
|
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
|
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
|
10
|
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
|
|
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
|
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
|
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
|
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு
நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
மேல் |