மெய்யின் தீரா
|
|
மெய்யின் தீரா மேவரு காமமொடு
|
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
|
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
|
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
|
5
|
இருவி தோன்றின பலவே. நீயே,
|
|
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
|
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
|
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
|
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
|
10
|
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
|
|
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
|
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
|
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
|
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
|
|
மேல் |