மேல் துறைக் கொளீஇய
|
|
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
|
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
|
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
|
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
|
5
|
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
|
|
பொற் தொடி முன்கை பற்றினனாக,
|
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
|
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
|
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
|
10
|
கற் போல் நாவினேனாகி, மற்று அது
|
|
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
|
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
|
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
|
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
|
15
|
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
|
|
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
|
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
|
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
|
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
|
20
|
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக்
கூறியது.-பரணர்
|
|
மேல் |