மைப்பு அறப் புழுக்கின்
|
|
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண்
சோறு
|
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
|
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
|
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
|
5
|
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
|
|
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
|
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
|
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
|
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
|
10
|
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
|
|
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
|
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
|
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
|
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
|
15
|
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
|
|
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
|
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
|
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
|
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
|
20
|
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
|
|
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி
வியர்
|
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
|
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
|
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
|
25
|
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
|
|
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
|
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
|
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
|
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்
|
|
மேல் |