மௌவலொடு மலர்ந்த
|
|
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
|
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
|
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
|
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
|
5
|
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
|
|
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
|
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
|
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
|
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
|
10
|
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
|
|
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
|
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
|
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
|
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
|
15
|
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
|
|
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
|
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
|
|
வாணன் சிறுகுடி வடாஅது
|
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல்
போன்றே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - .........
|
|
மேல் |