யாஅ ஒண் தளிர்
|
|
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
|
|
ஆக மேனி அம் பசப்பு ஊர,
|
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
|
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
|
5
|
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்
|
|
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
|
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
|
|
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
|
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
|
10
|
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,
|
|
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
|
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
|
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
|
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என,
|
15
|
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா
|
|
நின் வாய் இன் மொழி நல் வாயாக
|
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
|
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
|
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
|
20
|
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,
|
|
மறுதரல் உள்ளத்தர்எனினும்,
|
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.
|
பிரிவிடை வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
மேல் |