யாயே, கண்ணினும்
|
|
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
|
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி
சிவப்ப,
|
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
|
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
|
5
|
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
|
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
|
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்
சினை,
|
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
|
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
|
10
|
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
|
|
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
|
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
|
|
நல் வரை நாட! நீ வரின்,
|
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
|
பகற்குறி வாராநின்ற
தலைமகன் தோழியால் செறிப்பு
அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்'
என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. -
கபிலர்
|
|
மேல் |