யான் எவன் செய்கோ
|
|
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
|
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
|
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
|
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
|
5
|
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
|
|
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
|
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
|
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
|
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
10
|
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
|
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
|
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
|
15
|
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
|
|
நிலம் படு மின்மினி போல, பல உடன்
|
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
|
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
|
பொருள்வயிற் பிரிந்தவழி
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - நோய்பாடியார்
|
|
மேல் |