வயங்கு வெயில் ஞெமியப்
|
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
|
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
|
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
|
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
|
5
|
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
|
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
|
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
|
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
|
10
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
|
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
|
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
|
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
|
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
|
15
|
புகல் அரும், பொதியில் போலப்
|
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
மேல் |