வயங்கு வெள் அருவிய
|
|
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
|
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
|
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
|
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து
உயிர்ப்பின்,
|
5
|
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
|
|
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
|
|
சிறு பல் மின்மினி போல, பல உடன்
|
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
|
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
|
10
|
உத்தி அரவின் பைத் தலை துமிய,
|
|
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
|
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
|
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
|
|
தேராது வரூஉம் நின்வயின்
|
15
|
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே?
|
இரவுக் குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு
கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
|
|
மேல் |