வய வாள் எறிந்து
|
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
|
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
|
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
|
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
|
5
|
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
|
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
|
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
|
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
|
|
காடு மிக நெடிய என்னார், கோடியர்
|
10
|
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
|
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
|
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
|
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
|
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
|
15
|
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
|
|
தண் பெரு படாஅர் வெரூஉம்
|
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச்
சாத்தனார்
|
|
மேல் |