வயிரத்தன்ன வை ஏந்து
|
|
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்,
|
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
|
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
|
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
|
5
|
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி,
|
|
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,
|
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
|
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
|
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
|
10
|
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக,
|
|
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,
|
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
|
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
|
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்
|
15
|
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து,
என்றும்,
|
|
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
|
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
|
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்
|
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என,
|
20
|
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
|
|
முன் தான் கண்ட ஞான்றினு ம்
|
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.
|
தோழி வரைவு மலிந்து
சொல்லியது. - பரணர்
|
|
மேல் |