வருதும் என்ற நாளும்
|
|
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
|
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
|
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
|
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
|
5
|
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
|
|
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
|
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச்
|
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
|
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
|
10
|
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
|
|
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
|
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
|
|
கடாஅ யானை கொட்கும் பாசறை,
|
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
|
15
|
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,
|
|
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
|
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
|
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
|
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
|
வினை முற்றிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச்
சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார்
மகனார் மள்ளனார்
|
|
மேல் |