வருதும் என்ற நாளும்

 
144. முல்லை
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
5
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
10
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
15
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.

வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்